అధ్యాయం 10: விபூதி யோகம்

கடவுளின் எல்லையற்ற ஐஸ்வர்யங்களைப் போற்றுவதன் மூலம் யோகம்

இந்த அத்தியாயம் அர்ஜுனன் கடவுளை தியானிக்க உதவுவதற்காக பகவான் கிருஷ்ணரால் விவரிக்கப்பட்டது, அவரது அற்புதமான மற்றும் பிரகாசமான மகிமைகளை பிரதிபலிக்கிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் பக்தி அல்லது அன்பான பக்தியின் அறிவியலை வெளிப்படுத்தினார், மேலும் அவருடைய சில செல்வங்களை விவரித்தார். இங்கு, அர்ஜுனனின் பக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், அவரது எல்லையற்ற மகிமைகளை மேலும் விளக்குகிறார். இந்த வசனங்கள் படிப்பதற்கு மகிழ்வூட்டுவதாகவும், கேட்பதற்கு புல்லரிப்பதாகவும் உள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணர் தான் இருத்தலில் உள்ள எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். மனித குணங்களின் பலவகைகள் அவரிடமிருந்து எழுகின்றன. நான்கு பெரிய குமாரர்களும், ஏழு பெரிய முனிவர்களும், பதினான்கு மனுக்களும் அவர் மனதில் இருந்து பிறந்தவர்கள்; அவர்களிடமிருந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் தோன்றினர். அனைத்தும் அவரிடமிருந்து வருகின்றன என்பதை அறிந்தவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அவருடைய பக்தியில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய பக்தர்கள் அவருடைய மகிமைகளைப் பற்றி உரையாடுவதிலும், அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவூட்டுவதிலும் மிகுந்த திருப்தியைப் பெறுகிறார்கள். அவர்களின் மனம் அவருடன் இணைந்திருப்பதால், அவர்களின் இதயங்களில் அவர் வசிப்பது தெய்வீக அறிவைக் கொடுக்கிறது, இதன் மூலம் அறிந்தவர்கள் அவரை எளிதில் அடைய முடியும்.

அவரைக் கேட்டவுடன், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் தலைமைசான்ற நிலையைப் பற்றி முழுமையாக நம்புவதாக அறிவித்து, அவரை ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை என்று அறிவிக்கிறார். தம் செவிகளுக்கு இசை போன்ற தெய்வீக மகிமைகளை மேலும் விவரிக்குமாறு இறைவனிடம் வேண்டுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாவற்றின் ஆரம்பம், நடு மற்றும் முடிவு என்பதால், இருப்பவை அனைத்தும் அவரது சக்திகளின் வெளிப்பாடு என்று வெளிப்படுத்துகிறார். அவர் அழகு, மகிமை, சக்தி, அறிவு, செழுமை மற்றும் துறத்தல் ஆகியவற்றின் எல்லையற்ற நீர்த்தேக்கம். எப்பொழுதெல்லாம் நம்மை பேரானந்தத்தில் ஆழ்த்தி, பேரின்பத்தில் ஊறவைக்கிற, நமது கற்பனையை கவரும் அசாதாரணமான சிறப்பை காணும்பொழுது அது கடவுளின் ஐசுவரியத்தின் தீப்பொறி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லா உயிர்களும் பொருட்களும் அவற்றின் மகத்துவத்தைப் பெறும் அதிகார மையமாக அவர் இருக்கிறார். அத்தியாயத்தின் மீதமுள்ள பகுதியில், அவர் தனது செல்வத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் பொருள்கள், ஆளுமைகள் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கிறார். இறுதியாக, அவருடைய மகிமையின் அளவு அவர் விவரித்தவற்றின் கூட்டுத்தொகையால் தீர்மானிக்கப்படும் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில், அவரின் ஒரு பின்னத்தில் வரம்பற்ற பிரபஞ்சங்களை நிலை நிறுத்துகிறார் என்று கூறி முடிக்கிறார். எனவே, எல்லா மகிமைக்கும் ஆதாரமான கடவுளை நாம் வணங்க வேண்டும்.

 

భగవద్గీత 10.1 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ வலிமையான கைகளை உடையவனே, என் தெய்வீக போதனைகளை மீண்டும் கேள். நீ என் அன்புக்குரிய நண்பன் என்பதால் உன் நலனை விரும்பி, அவற்றை உனக்கு வெளிப்படுத்துகிறேன்.

భగవద్గీత 10.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தேவலோக தெய்வங்களுக்கோ அல்லது மகத்தான முனிவர்களுக்கோ எனது தோற்றம் தெரியாது. தேவர்களும், சிறந்த தீர்க்கதரிசிகளும் தோன்றும் ஆதாரம் நானே.

భగవద్గీత 10.3 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என்னைப் பிறக்காதவனாகவும், ஆரம்பமில்லாதவனாகவும், பிரபஞ்சத்தின் அதிபதியாகவும் அறிந்தவர்கள், மனிதர்களில் மாயையிலிருந்து விடுபட்டு, எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுபட்டவர்கள்.

భగవద్గీత 10.4 - 10.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என்னிடமிருந்தே மனிதர்களுக்கு புத்தி, அறிவு, சிந்தனைத் தெளிவு, மன்னிப்பு, உண்மை, புலன்கள் மற்றும் மனம் மீதான கட்டுப்பாடு, இன்பம் மற்றும் துன்பம், பிறப்பு மற்றும் இறப்பு, பயம் மற்றும் தைரியம், அகிம்சை, சமநிலை, மனநிறைவு, சிக்கனம், தொண்டு, புகழ் மற்றும் இழிவு போன்ற பல்வேறு குணங்கள் தோன்றுகின்றன.

భగవద్గీత 10.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஏழு பெரிய முனிவர்களும், அவர்களுக்கு முன் இருந்த நான்கு மகான்களும், பதினான்கு மனுக்களும் என் மனதில் இருந்து பிறந்தவர்கள், உலகில் உள்ள அனைத்து மக்களும் அவர்களிடமிருந்து பிறந்தவர்கள்.

భగవద్గీత 10.7 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

என் மகிமைகளையும் தெய்வீக சக்திகளையும் உண்மையில் அறிந்தவர்கள் அசைக்க முடியாத பக்தி யோகத்தின் மூலம் என்னுடன் ஐக்கியமாகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

భగవద్గీత 10.8 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லா படைப்புகளுக்கும் நானே பிறப்பிடம். எல்லாம் என்னிடமிருந்து வருகிறது. இதை நன்கு அறிந்த ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்கள்.

భగవద్గీత 10.9 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தங்கள் மனதை என்னிடமே நிலைநிறுத்தி, தங்கள் வாழ்க்கையை என்னிடம் ஒப்படைத்த என் பக்தர்கள் எப்பொழுதும் என்னில் திருப்தி அடைகிறார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிவூட்டுவதிலும், என் மகிமைகளைப் பற்றி உரையாடுவதிலும் அவர்கள் மிகுந்த திருப்தியையும் ஆனந்தத்தையும் பெறுகிறார்கள்

భగవద్గీత 10.10 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அன்பான பக்தியில் எவருடைய மனம் எப்பொழுதும் என்னுடன் இணைந்திருக்கிறதோ, அவர்களுக்கு நான் என்னை அடையக்கூடிய தெய்வீக அறிவை அளிக்கிறேன்.

భగవద్గీత 10.11 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அவர்கள் மீதுள்ள இரக்கத்தால், அவர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நான், அறியாமையால் பிறந்த இருளை, அறிவின் ஒளிரும் விளக்கினால் அழிக்கிறேன்.

భగవద్గీత 10.12 - 10.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனன் கூறினார்: நீங்கள் ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை, உன்னத இருப்பிடம், உன்னத பராமரிப்பாளர், நித்திய கடவுள், மூலாதார இருப்பு, பிறக்காதவர் மற்றும் மகத்தானவர். நாரதர், அசித், தேவல், வியாஸ் போன்ற சிறப்புமிக்க முனிவர்கள் இதைப் பிரகடனம் செய்தார்கள், இப்பொழுது நீங்களே அதை எனக்கு அறிவிக்கிறீர்கள்.

భగవద్గీత 10.14 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ கிருஷ்ணா, நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் நான் உண்மையாக ஏற்றுக்கொள்கிறேன். ஓ சிறந்த இறைவனே, தேவர்களாலும், அசுரர்களாலும் உமது உண்மையான ஆளுமையை புரிந்து கொள்ள முடியாது.

భగవద్గీత 10.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உண்மையில், உன்னதமான ஆளுமையே, அனைத்து உயிரினங்களின் படைப்பாளி மற்றும் இறைவனே, கடவுள்களின் கடவுளே, மற்றும் பிரபஞ்சத்தின் இறைவனே, உங்களது நினைத்தும் பார்க்க இயலாத ஆற்றலால், நீங்கள் மட்டுமே உங்களை அறிவீர்கள்!

భగవద్గీత 10.16 - 10.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தயவு செய்து உங்கள் தெய்வீக ஐஸ்வர்யங்களை எனக்கு விவரியுங்கள், அதன் மூலம் நீங்கள் உலகங்களை வியாபித்து அவற்றில் வசிக்கிறீர்கள். ஓ யோகத்தின் உன்னதமான நிபுணரே, நான் எப்படி உங்களை அறிய மற்றும் உங்களைப் பற்றி நினைக்க முடியும்? உன்னத தெய்வீக ஆளுமையே,மேலும் தியானம் செய்யும் பொழுது, நான் எந்த வடிவில் உங்களைப் பற்றி நினைக்க முடியும்?

భగవద్గీత 10.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உங்களது தெய்வீக மகிமைகள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றி மீண்டும் விரிவாகச் சொல்லுங்கள், ஓ ஜனார்தனா. உங்களது அமிர்தத்தைக் கேட்டு என்னால் ஒருபொழுதும் சோர்வடைய முடியாது.

భగవద్గీత 10.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பகவான் கூறினார்: குரு வம்சத்தினரில் சிறந்தவனே, எனது தெய்வீக மகிமைகளை இப்பொழுது சுருக்கமாக உனக்கு விவரிக்கிறேன், ஏனென்றால் அளவைகளின் விவரங்களுக்கு முடிவே இல்லை.

భగవద్గీత 10.20 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ அர்ஜுனா, நான் அனைத்து உயிர்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் ஆரம்பம், நடுப்பகுதி, மற்றும் முடிவு.

భగవద్గీత 10.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அதிதியின் பன்னிரண்டு மகன்களில் நான் விஷ்ணு; ஒளிரும் பொருட்களில், நான் சூரியன். மருதுகளில் மரீச்சியாகவும், இரவு வானில் உள்ள நட்சத்திரங்களில் சந்திரனாகவும் என்னை அறிந்துகொள்.

భగవద్గీత 10.22 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் வேதங்களில் ஸாமவேதமாகவும், தேவலோக தெய்வங்களில் இந்திரன் ஆகவும் இருக்கிறேன். புலன்களுக்கு மத்தியில் நான் மனம்; உயிர்களுக்கு மத்தியில் நான் உணர்வு.

భగవద్గీత 10.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ருத்ரர்களில், என்னை சிவபெருமான் என்று அறிக. அரைவான மனிதர்கள் மற்றும் அசுரர்களில் நான் குபேரன். வஸுக்களில் நான் அக்னியாகவும், மலைகளில் மேருவாகவும் இருக்கிறேன்.

భగవద్గీత 10.24 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனா, ஆசாரியர்களிடையே நான் பிருஹஸ்பதி; போர்வீரர்களில், நான் கார்த்திகேயன்; நீர்த்தேக்கங்களில், என்னை கடல் என்று அறிந்து கொள்.

భగవద్గీత 10.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

சிறந்த தீர்க்கதரிசிகளில் நான் பிருகு. மற்றும் ஒலிகளில் நான் ஆழ்நிலை ப்ரணவ மந்திரம் ஓம். யாகங்களில் உச்சரிக்கப்படும் புனித நாமமாக என்னைக் கருதுங்கள். அசையாத பொருட்களில் நான் இமயமலை.

భగవద్గీత 10.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

மரங்களுக்கிடையில் நான் ஆலமரம்; தேவலோக முனிவர்களில், நான் நாரதர். கந்தர்வர்களில், நான் சித்ரரதன், மற்றும் சித்தர்களில், நான் முனிவர் கபிலர்.

భగవద్గీత 10.27 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

குதிரைகளில் நான் அமிர்தக் கடலைக் கடைந்திலிருந்து பிறந்த உச்சைஶ்ரவன் என்று அறிவாய். வீறாப்பான யானைகளில் என்னை ஐராவதம் என்றும், மனிதர்களில் அரசன் என்றும் அறிவாய்.

భగవద్గీత 10.28 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் ஆயுதங்களில் வஜ்ரா (இடி) மற்றும் பசுக்களில் காமதேனு. நான், இனப்பெருக்கத்திற்கான காரணங்களுக்கு இடையேயான அன்பின் கடவுள் காமதேவன்; மற்றும் பாம்புகளில் நான் வாசுகி.

భగవద్గీత 10.29 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பாம்புகளில் நான் அனந்தசேஷன்; நீர்வாழ் உயிரினங்களில், நான் வருணன். மறைந்த முன்னோர்களில், நான் அர்யமா; சட்டத்தை வழங்குபவர்களில், நான் மரணத்தின் அதிபதியான எமதர்மராஜன்.

భగవద్గీత 10.30 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் அஸூரர்களில் பிரஹலாதன்; கட்டுப்பாடுகள் அனைத்திலும், நான் நேரமாக இருக்கிறேன். நான் விலங்குகளில் சிங்கம், பறவைகளில் கருடன் என்றும் அறிந்து கொள்.

భగవద్గీత 10.31 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தூய்மைப்படுத்தும் அனைத்திலும் நான் காற்று, ஆயுதம் ஏந்துபவர்களில் நான் ராம். நீர்வாழ் உயிரினங்களில் நான் முதலை, ஓடும் நதிகளில் நான் கங்கை.

భగవద్గీత 10.32 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனா, நான் அனைத்து படைப்புகளின் ஆரம்பம், நடுவு, மற்றும் முடிவு என்று அறிந்து கொள். விஞ்ஞானங்களில், நான் ஆன்மீகத்தின் விஞ்ஞானம், மற்றும் விவாதங்களில், நான் தர்க்கரீதியான முடிவு.

భగవద్గీత 10.33 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லா எழுத்துக்களிலும் நான் ஆரம்பம் 'அ’. இலக்கண கலவைகளின் இரட்டை வார்த்தை. நான் முடிவற்ற காலம், படைப்பாளிகளில் நான் ப்ரஹ்மா .

భగవద్గీత 10.34 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நானே அனைத்தையும் விழுங்கும் மரணம், வருங்காலத்தில் இருக்கப்போகிறவற்றின் தோற்றம் நானே. பெண்மையின் குணங்களில், புகழ், செழிப்பு, சிறந்த பேச்சு, நினைவாற்றல், புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் மன்னிப்பு.

భగవద్గీత 10.35 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஸாம வேதத்தில் உள்ள கீர்த்தனைகளில் என்னை பிருஹத்ஸாம என்று அறிவாய்; கவிதைகளி-ல் நான் காயத்ரீ. இந்து நாட்காட்டியின் பன்னிரண்டு மாதங்களில், நான் மார்கழி, மற்றும் பருவங்களில் நான் பூக்கள் மலரும் வசந்த காலம்,

భగవద్గీత 10.36 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் ஏமாற்றுக்காரர்களின் சூதாட்டம், மகத்துவமானவர்களின் மகிமை, வெற்றியாளர்களின் வெற்றி, உறுதியானவர்களின் உறுதிப்பாடு மற்றும் நல்லொழுக்கமுள்ளவர்களின் நற்பண்பு.

భగవద్గీత 10.37 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

விருஷ்ணியின் சந்ததிகளில் நான் கிருஷ்ணன், பாண்டவர்களில் நான் அர்ஜுனன். என்னை முனிவர்களில் வேத வியாசர் என்றும், சிறந்த சிந்தனையாளர்களில் ஶுக்ராச்சாரியர் என்றும் அறிந்து கொள்.

భగవద్గీత 10.38 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அக்கிரமத்தையும் ஒழுங்கான நடத்தையையும் தடுப்பதற்கான வழிமுறைகளில் நான் ஒரு தண்டனை மற்றும் வெற்றி அடைய விரும்புவோர் மத்தியில் நான் நல் நடத்தை. இரகசியங்களுக்கு மத்தியில் நான் மௌனம் ,மற்றும் நான் ஞானிகளின் ஞானம்.

భగవద్గీత 10.39 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் நான்தான் விதை. நான் இல்லாமல் அசையும் அல்லது அசையாத எந்த ஒரு உயிரினமும், இருக்க முடியாது.

భగవద్గీత 10.40 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே.

భగవద్గీత 10.41 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அழகு, செழுமை, புத்திசாலித்தனம் என நீ எதைப் பார்த்தாலும், அது என்னிடமிருந்து பிறந்ததாகக் கருதுவாய், மற்றும் என் புத்திசாலித்தனத்தின் தீப்பொறி என்று அறிவாய்.

భగవద్గీత 10.42 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ அர்ஜுனா! இந்த விரிவான அறிவின் தேவை என்ன? என் இருப்பின் ஒரு பகுதியால், நான் இந்த முழு படைப்பிலும் ஊடுருவி ஆதரிக்கிறேன் என்பதை எளிமையாக அறிந்து கொள்.
Swami Mukundananda
10. விபூதி யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency